Bill Gates Quotes

"IF YOU BORN POOR IT'S NOT YOUR MISTAKE , BUT IF YOU DIE POOR IT'S YOUR MISTAKE".

MARK ZUCKERBERG (FACEBOOK FOUNDER) QUOTES

SUCCESSFUL PEOPLE ONLY HAVE TWO THINGS ON THERE LIP 1. SILENCE 2. SMILE .

கல்வி பொதுத் தராதரப் பத்திர

சாதாரண தரப் பரீட்சை மற்றும் கல்வி பொதுத் தராதரப் பத்திர உயர்தர தரப் பரீட்சை காண தமிழ் மொழிமூல வழிகாட்டி

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

Thursday, November 9, 2017

குழந்தைகளுக்கு பழச்சாற்றை எப்போது கொடுக்கவேண்டும்


                      குழந்தைகள் பழவகைகளை சாப்பிடுவது அவர்களின் உடல் நலனுக்கு உகந்தது. ஆனால் பெரும்பாலான குழந்தைகள் பழத்துண்டுகளை நறுக்கிக் கொடுத்தால் சாப்பிட மறுக்கிறார்கள். அதனால் அவர்களுக்கு பழங்களில் உள்ள சத்துக்கள் கிடைக்கவேண்டும் என்பதற்காக தாய்மார்கள், பழங்களை பயன்படுத்தி பழச்சாறு தயாரித்து வழங்குகிறார்கள்.

             ஆனால் எல்லா நேரத்திலும் குழந்தைகளுக்கு பழச்சாறு கொடுக்கக் கூடாது. காலையில் வெறும் வயிற்றில் பழச்சாறு கொடுப்பதை தவிர்த்துவிடவேண்டும். சாப்பிட்ட உடனேயும் ஜூஸ் கொடுக்கக்கூடாது. காலை உணவு மற்றும் மதிய உணவுக்கு இடைப்பட்ட நேரங்களில் ஜூஸ் கொடுக்கலாம். குறிப்பாக காலை 11 மணி மற்றும் பிற்பகல் 3 மணி அளவில் பழச்சாறு பருக வைக்கலாம். ஒரே மாதிரியான பழ ஜூஸை தினமும் கொடுப்பதையும் தவிர்க்க வேண்டும்.



                       சிலவகை பழங்கள் குழந்தைகளுக்கு பிடிக்காது. அவை சத்தானது என்பதற்காக கட்டாயப்படுத்தி அருந்தவைக்கக்கூடாது. அவர்களுக்கு பிடித்தமான மற்ற பழங்களுடன் அவர்களுக்கு பிடிக்காத பழங்களையும் சேர்த்து  பழச்சாறாக  தயாரித்துக் கொடுக்கலாம். இரவு நேரங்களில் பழச்சாறு  கொடுப்பதை கூடுமானவரை தவிர்க்க வேண்டும். அதிலும் குறிப்பாக எலுமிச்சை, திராட்சை, ஆரஞ்சு பழ பழச்சாறுகளை  இரவு நேரங்களில் தவிர்த்திட வேண்டும். குளிர்காலத்தில் சளித்தொல்லை, மூச்சுத்திணறல் போன்ற பாதிப்புள்ள குழந்தைகளுக்கு பழச்சாறு  கொடுக்கக்கூடாது.

                குழந்தைகளுக்கு 10 மாதத்தில் இருந்தே பழச்சாறு கொடுக்க தொடங்கலாம். நாளடைவில் பழச்சாறு  கொடுப்பதை படிப்படியாக குறைத்துவிட்டு பழங்களை சாப்பிட பழக்கப்படுத்த வேண்டும்


Saturday, November 4, 2017

குழந்தைகளுக்கு மத்தியில் ஏற்படும் சண்டையை எவ்வாறு கையாள்வது?



         அண்ணன், தம்பி, அக்கா, தங்கை என உடன் பிறப்புகளுள் பகைமை வளர முக்கிய காரணமாக இருப்பது பெற்றோர் தான்.
     திருமணமாகி, 10 வயதுக்குட்பட்ட இரண்டு குழந்தைகளை வளர்க்கும் பெற்றோர்களுக்கு தினமும் "தகுடுதத்தோம்" கதி தான். அந்த அளவு வீட்டில் தினம் தினம் ஓர் உலகப் போர் மூண்டுவிடும். தெருவே அதிரும் அளவு சண்டையிடும் இவர்கள் கூறும் அதற்கான காரணம் எப்போதுமே மிகவும் சில்லியாக தான் இருக்கும்.



         குழந்தைகளாக இருந்த போது நாமும் இதையே தான் செய்தோம் என்பதை மறந்துவிட முடியாது. உடன்பிறந்த இவர்களுக்குள் இப்படி சண்டை மற்றும் பகைமை வளர்வதற்கு ஒருசில வகைகளில் பெரியவர்கள் தான் முக்கியக் காரணமாக இருக்கிறார்கள்....

    அண்ணன், தம்பி, அக்கா, தங்கை என உடன் பிறப்புகளுள் பகைமை வளர முக்கிய காரணமாக இருப்பது பெற்றோர் தான். இருவரை மனதினுள் சமமாக காதலித்தாலும், வெளியில் சுட்டியாக இருப்பவர் அல்லது படிப்பில் கெட்டிக்காரராக திகழும் குழந்தைகளுக்கு முன்னுரிமை வழங்கி இன்றி நடந்துக் கொள்வதை தவிர்த்தாலே இந்த பகைமை குறைந்துவிடும்.
குற்றம் கூறுவது, இரண்டு மூன்று குழந்தைகள் இருக்கும் வீட்டில் அனைவரும், அனைத்திலும் சிறந்து விளங்க மாட்டார்கள். எனவே, யாராவது எதையாவது சரியாக செய்யாவிட்டால், மற்ற குழந்தைகள் முன்பு நிறுத்தி குற்றம் கூற வேண்டாம்.

      பெரும்பாலும் உடன்பிறந்த குழந்தைகளுக்கு மத்தியில் பகைமை வளர காரணமே ஒருவரை, மற்றொருவரோடு ஒப்பிட்டு பேசுவதனால் தான். எனவே, எக்காரணம் கொண்டும் ஒப்பிட்டு பேசாதீர்கள்.

    உறவினர்கள்.., பெற்றோர்கள் தங்கள் குழந்தையை எந்த பாகுபாடு இன்றி வளர்த்தாலும், இந்த உறவினர்கள் சும்மா இருக்காமல், அவன் நல்ல சுட்டியா இருக்கான், சுறுசுறுப்பா இருக்கான், இதோ இவன் தான் மந்தமா இருக்கான் என்று கூறிவிட்டு சென்றுவிடுவார்கள். ஆனால், இது அந்த பிஞ்சி மனதில் பகைமை எனும் நஞ்சை வளர்ப்பதற்கு சமம். இவ்வாறு செய்யா வேண்டாம்.

   பெரியவர்களோடு ஒப்பிடுவது, நீதான் தாத்தா மாதிரி இருக்க, நீதான் அப்பா மாதிரி இருக்க.. என்று ஒருவரை பெரியவர்களோடு ஒப்பிடுதல். பொதுவாக குழந்தைகள் பெரியவர்களை போல இருக்க வேண்டும் என்று விரும்புவர்கள். இதில், ஒருவர் அப்படி இருக்கிறார், தான் அப்படி இல்லையா என்பது அவர்கள் மீது பகைமையை வளர்க்க காரணமாகிவிடும்.


Wednesday, November 1, 2017

Smartphone ல் விளையாடும் குழந்தைகளை தாக்கும் கழுத்துவலி

Smartphone ல் விளையாடும் குழந்தைகளை தாக்கும் கழுத்துவலி

    Smartphoneகள் இப்போது குழந்தைகளின் கைகளில் சர்வ சாதாரணமாக தவழ தொடங்கி விட்டன. அவர்களின் சேட்டைகளை கட்டுப்படுத்துவதற்காக பெற்றோரே கையில் போனை கொடுத்துவிடுகிறார்கள். குழந்தைகளை போனிலேயே மூழ்க வைப்பது மன நலத்திற்கு மட்டுமின்றி உடல் நலத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்திவிடும். குழந்தைகள் நீண்ட நேரம் வீடியோ பார்த்தாலோ அல்லது விளையாடினாலோ கழுத்து பகுதியில் அழுத்தம் அதிகமாகி வலி ஏற்படும்.



             குழந்தைகள் குனிந்த தலை நிமிராமலேயே கூர்ந்து போனை பார்த்துக்கொண்டிருந்தால் கழுத்துவலி ஏற்படும். நாளடைவில் தோள்பட்டை வலி, முதுகுவலி ஏற்படவும் வழிவகுத்துவிடும். ஆதலால் குழந்தைகள் அதிக நேரம் போன் உபயோகிப்பதற்கு தடைபோட வேண்டும்

            அவர்கள் போனை பயன்படுத்தும்போதும் நேராக அமர்ந்து இருக்கிறார்களா? என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். தலை குனிந்து போனை பார்ப்பதற்கு அனுமதிக்கக்கூடாது. இப்போது குழந்தைகளின் கல்வி சம்பந்தமான ஏராளமான அப்ளிகேஷன்கள் இருக்கின்றன
      அது அவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்ற எண்ணத்தில் அதிக நேரத்தை போனிலேயே செலவழிக்க அனுமதிக்கக்கூடாது.


              அது மூளைக்கு அயர்ச்சியை ஏற்படுத்தி எதிர்விளைவுகளை உண்டாக்கிவிடும். பெற்றோர் தங்கள் கைகளில் போனை வைத்துக்கொண்டு குழந்தைகளுக்கு பாடம் சம்பந்தமான தகவல்களை சொல்லி கொடுக்கலாம். அப்போதும் செய்முறை மூலமே பாடங்களை பயிற்றுவிப்பது நல்லது.
          Smartphone மோகத்தில் இருந்து விடுவிக்க, வெளி விளையாட்டுகள் மீது அவர்களின் கவனத்தை திசை திருப்பி விட வேண்டும்.

Wednesday, October 25, 2017

குழந்தைகள் சாப்பிட அடம் பிடிக்கிறார்களா?

                         


                          குழந்தைகள் சாப்பிட அடம் பிடிக்கிறார்களா? அப்போ இதயெல்லாம் செய்யுங்கள்


                குழந்தைகளுக்கு என்று சில ரசனைகள் உள்ளது. ஆனால் அதை புரிந்துகொண்டு, தங்கள் குழந்தைகளை சாப்பிட வைக்க தாய்மார்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள்.

             குழந்தைகளை சமத்தாக சாப்பிட வைக்க இதோ சில டிப்ஸ்
குழந்தைகளுக்கு சாப்பிட கொடுக்கிற பொருள் கண்ணை கவரும் வண்ணங்களாக இருக்க வேண்டும். அதாவது சிவப்பு, பச்சை போன்ற வண்ணங்களில் கொடுத்தால் குழந்தைகள் விரும்புவர்.
பெரிய கப்பில் குழந்தைகளுக்கு பால் கொடுப்பதை விட சிறிய கப்பில் இரண்டு முறை கொடுத்தால் போதுமானது.

                   வெறும் பாலை கொடுப்பதை தவிறுங்கள். பாலில் ஏதாவது சொக்லெட் பவுடர் போன்றவற்றை பயன்படுத்தலாம்.
மசாலா அதிகம் உள்ள பொருள்களை குழந்தைகளுக்கு தறுவது சரியானதல்ல. முதல் முறை சுவைத்ததும் அவர்களுக்கு பிடிக்கவில்லை என்றால் பிறகு எப்போதுமே அதை விரும்ப மாட்டார்கள்.

                   குழந்தைகள் 2 கேரட்டுகள் மேல் சாப்பிட கேட்டால் கொடுக்காதீர்கள். அப்படி ஒரே காய்கறி அல்லது பழங்களை கொடுத்தால் மற்ற சாப்பாடு உணவில் இருக்கும் சத்துக்களை அவர்கள் மிஸ் செய்வார்கள்.

                தன்னை சுற்றி இருப்பவர்கள் செய்யும் விஷயங்களை செய்ய குழந்தைகள் ஆசைப்படுவார்கள். அதனால் குழந்தைகள் சாப்பிடும் போதும் பெற்றோர்கள் அவர்கள் பக்கத்தில் உட்கார்ந்து சாப்பிட்டால் அவர்கள் அதை விரும்புவார்கள். இதேபோல் அவர்கள் விளையாடும் போதும் அவர்களுடன் இருப்பது நல்லது.

                            உங்கள் குழந்தைகளின் விருப்பத்திற்கு ஏற்ப சாப்பிட கொடுங்கள். மற்றவர்கள் தங்கள் குழந்தைகளுக்கு தருவது போல் நாமும் கொடுப்போம் என்று உங்கள் குழந்தைகளை வாட்டாதீர்கள்.

Tuesday, October 24, 2017

அடம்பிடிக்கும் குழந்தைகளை சமாளிப்பது எப்படி?

           
             குழந்தை எதையாவது கேட்டு அடம்பிடித்தால், குழந்தையிடம் விவாதிக்காதீர்கள். தவறான விஷயம் அல்லது நடக்காத ஓர் விஷயம், ஆபத்தான ஒரு விஷயத்திற்கு அழுது அடம்பிடித்தாலும் நீ சொல்வது தவறு, நடக்காது என்று சொல்லி உங்களின் கருத்தை நிறுவ முயற்சிக்காதீர்கள்.



                பேசுவது என்பது நீங்கள் மட்டுமே பேசிக் கொண்டிருப்பது அல்ல. வீணாக அடம்பிடிக்காதே என்று அறிவுரை வழங்குவது அல்ல. அவர்கள் சொல்வதை கேட்கவும் வேண்டும்.அப்போதைக்கு அவர்களை சமாதனப்படுத்தும் விதமாக பேச வேண்டும். நீங்கள் சொல்கிற பதில் அப்போதைக்கு அவர்கள் நம்புவதற்கு போதுமானதாக இருந்தாலே போதும்.



              ஒவ்வொரு குழந்தைக்கும் அவர்களது பெற்றோர்கள் தான் முதல் ரோல்மாடலாக இருப்பார்கள். நீங்கள் செய்யும் ஒவ்வொரு செயலையும் உங்கள் குழந்தை கவனித்துக் கொண்டேயிருக்கும். அதனால் பெற்றோர் கவனமாக இருப்பது மிகவும் அவசியமானது.

                  குழந்தைகளுக்கு ஏற்ற மனநிலையை உருவாக்கிடுங்கள். அவர்களிடம் மனம் விட்டு பேசுபவராக எப்போதும் சப்போர்ட்டிங் செய்திடும் பெற்றோர்களாக இருங்கள். தேவையில்லாமல் அவர்களை கண்காணிப்பவர்களாக விமர்சிப்பவர்களாக மட்டுமே இருக்க வேண்டாம்.

                   எப்போதும் வீட்டுக்குள்ளே குழந்தைகளை அடைத்து வைக்காமல், மற்ற குழந்தைகளுடன் இணைந்து விளையாட அனுமதியுங்கள். வெற்றி தோல்விகளையும், பகிர்தலையும் குழந்தைக்கு ஊக்கப்படுத்துங்கள். பிறர் வைத்திருப்பது எல்லாம் தனக்கும் வேண்டும் என்று அடம்பிடிப்பதை தவிர்க்க பகிர்தல் என்பது மிகவும் தேவையானதாக இருக்கும்.

              உங்கள் குழந்தையின் செயல்களை பிறரிடம் சொல்லி பெருமைப்படுவதை விட அந்தக் குழந்தையிடமே நேரடியாக பாராட்டுங்கள். சின்ன சின்ன பரிசுகள் கூட கொடுக்கலாம். அடம்பிடித்து அழுவது தவறு என்பதை நாசூக்காக உணர்த்துங்கள்.

                   அடம்பிடித்தாலே குழந்தை தவறான விஷயத்திற்கு தான் அடம்பிடிக்கும் என்று நீங்களாகவே முடிவு செய்யாதீர்கள். அவர்களின் விருப்பு வெறுப்புகளுக்கு மதிப்பு கொடுங்கள். குழந்தையின் விருப்பத்திற்கு மரியாதை கொடுங்கள்.

         அடம்பிடித்து அழும் குழந்தையை அப்டித்தான் எல்லாத்துக்கும் அடம்பிடிச்சு அழுவா என்று கண்டுகொள்ளாமல் விடுவதை முற்றிலுமாக தவிர்த்திடுங்கள். இது குழந்தையின் மனநிலையையே பாதித்துவிடும். உங்கள் மீது இருக்கும் நம்பிக்கையை முற்றிலுமாக குழைத்துவிடும்.

மலேரியா என்றால் என்ன?

மலேரியா என்றால் என்ன?


                        மலேரியா என்பது ஒட்டுண்ணிகளால் ஏற்படும் ஒரு தொற்றுநோய். இது நுளம்பினால் ஒருவரிலிருந்து ஒருவருக்குக் கடத்தப்படுகிறது. தொற்று நோயானது, குளிர் நடுக்கம், காய்ச்சல், மற்றும் ஃப்ளூ காய்ச்சல் போன்ற வேறு அறிகுறிகளை ஏற்படுத்தும். இதற்குச் சிகிச்சை செய்யப்படாவிட்டால் மரணத்தில் விளைவடையலாம். பெரும்பாலும் பிள்ளைகள்தான் மலேரியா நோய்க்காளாகும் ஆபத்திலிருக்கிறார்கள்.

            உலகின் பின்வரும் சில பாகங்களில் மலேரியா நோய் பொதுவானதாகக் காணப்படுகிறது:
  1. ஆபிரிக்கா
  2. ஆசியா
  3. மத்திய கிழக்கு
  4. தென் அமெரிக்கா
  5. மத்திய அமெரிக்கா


                        இந்தப் பகுதிகளுக்கு விஜயம் செய்யும்போது பிள்ளைகளை தொற்றுநோய் பாதிக்கலாம். பிரயாணம் செய்யும்போது முன்கூட்டியே தயாராவது முக்கியம். தகுந்த மருந்துகளை எடுத்துச் செல்லவும்

Monday, October 23, 2017

பெற்றோர்களே குழந்தைகளோடு விளையாடுங்கள்

பெற்றோர்களே குழந்தைகளோடு விளையாடுங்கள்



                               பெற்றோராக குழந்தைகளோடு விளையாடுவது நீங்கள் செய்யவேண்டிய முக்கியமான பணிகளில் ஒன்று
குழந்தைகளுடன் செலவிடும் நேரத்தை வீண் என்று ஒரு போதும் நினைக்க வேண்டாம் என்கிறார்கள், மனநல மருத்துவர்கள். விளையாட்டு ஒரு மகிழ்வான விஷயம் என்பதோடு ஈடுபாட்டையும் ஊக்குவிக்கக் கூடியது. பலன்களை அடைவதில் சிந்தித்தலை விட செயல்படுதல் மிகவும் முக்கியமான ஒன்று. பெற்றோராக குழந்தைகளோடு விளையாடுவது நீங்கள் செய்யவேண்டிய முக்கியமான பணிகளில் ஒன்று.

விளையாட்டு, குழந்தைகளுக்கு மட்டுமின்றி, பெரியவர்களுக்கும் வாழ்வின் ஒரு முக்கிய அங்கமாகும். குழந்தைகளிடம் அதிக நேரம் செலவிடுவோர் அதன் மூலம் வாழ்வில் நல்ல மாற்றங்கள் நிறைய ஏற்படுவதாக நம்புகின்றனர். இது உங்களை இளைப்பாறச் செய்யும், ஊக்கம் கொள்ளச் செய்யும். குழந்தைகளுடன் விளையாடுவது மகிழ்ச்சியைத் தருவதால் மனம் புத்துணர்ச்சி பெற்று சோர்விலிருந்து விடுபடுவோம்.

                                           இந்த விளையாட்டுகள் பெரியவர்களுக்கும் குழந்தைகளுக்கும் உடல் திறனையும், அறிவு மற்றும் உணர்வு திறனையும் மேம்படுத்துகின்றன. குழந்தைகளுடன் நேரம் செலவிடும் போது, அவர்களுடைய மகிழ்ச்சியான பொழுதுகளில், அவர்கள் கற்றுக் கொள்ளவேண்டியவற்றை திணிக்க முயலாதீர்கள். குழந்தைகளின் செய்கைகளை அவர்களே கட்டுப்படுத்திக் கொள்ளவும், முடிவெடுக்கவும், அனுமதியுங்கள்.
குழந்தைகளுடன் செலவிடும் நேரத்தில் நீங்கள் பொறுமையையும், புரிதலையும், கற்றுக்கொள்வதற்கு இது ஒரு முக்கிய பங்காற்றுகிறது. குழந்தைகளுடன் விளையாடும்போது ஏற்படும் பந்தம் நெடுநாள் வரை நீடித்திருக்கும். இது தங்களுக்கு ஏற்படும் பிரச்சினைகள் மற்றும் கவலைகளை பகிர்ந்து கொள்வதற்கான வாய்ப்பை குழந்தைகளுக்கு ஏற்படுத்திக் கொடுக்கும். கடும் மன நெருக்கடியில் உள்ள பெரியவர்களுக்கு, குழந்தைகளுடன் செலவிடும் நேரத்தின் போது மன அழுத்தம் பெருமளவு குறைகிறது.

                       குழந்தைகள்-பெரியவர்கள் இடையே காணப்படும் சமூக, உணர்வு சார்ந்த நடத்தைகள், அவர்களிடையே காணப்படும் பந்தம் ஆகியவற்றில் ஆக்சிடோசின் என்ற ஹார்மோன் முக்கிய பங்கு வகிக்கிறது, அது மனதிற்கு ஆறுதலையும் அமைதியையும் தருவதாகக் கருதப்படுகிறது. குழந்தைகளுடனான விளையாட்டு மனத்திற்குத் தெம்பைத் தருவதோடு மட்டுமல்லாமல் மேலும் சுறுசுறுப்படையச் செய்கிறது.

                                          ஒரே இடத்தில் அசையாமல் இருந்து கொண்டோ அல்லது டி.வி.யை பார்த்துக் கொண்டோ இருப்பவர்களுக்கு அந்தப் பழக்கத்திலிருந்து வெளியே வரவும் இது உதவுகிறது. உங்கள் கற்பனைத் திறனை தூண்டி புதிய சிந்தனைகளை வாழ்வில் புகுத்துகிறது. இது மன ஆரோக்கியத்தை மேம்பட வைக்கிறது. நாம் வளர வளர மெல்ல விளையாடுவதைக் குறைத்து விடுவோம் எனினும் விளையாட்டு உங்களை இளமையாகவும் மூளையை சுறுசுறுப்பாகவும் வைக்க உதவும்.