Bill Gates Quotes

"IF YOU BORN POOR IT'S NOT YOUR MISTAKE , BUT IF YOU DIE POOR IT'S YOUR MISTAKE".

MARK ZUCKERBERG (FACEBOOK FOUNDER) QUOTES

SUCCESSFUL PEOPLE ONLY HAVE TWO THINGS ON THERE LIP 1. SILENCE 2. SMILE .

கல்வி பொதுத் தராதரப் பத்திர

சாதாரண தரப் பரீட்சை மற்றும் கல்வி பொதுத் தராதரப் பத்திர உயர்தர தரப் பரீட்சை காண தமிழ் மொழிமூல வழிகாட்டி

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

Thursday, November 9, 2017

குழந்தைகளுக்கு பழச்சாற்றை எப்போது கொடுக்கவேண்டும்


                      குழந்தைகள் பழவகைகளை சாப்பிடுவது அவர்களின் உடல் நலனுக்கு உகந்தது. ஆனால் பெரும்பாலான குழந்தைகள் பழத்துண்டுகளை நறுக்கிக் கொடுத்தால் சாப்பிட மறுக்கிறார்கள். அதனால் அவர்களுக்கு பழங்களில் உள்ள சத்துக்கள் கிடைக்கவேண்டும் என்பதற்காக தாய்மார்கள், பழங்களை பயன்படுத்தி பழச்சாறு தயாரித்து வழங்குகிறார்கள்.

             ஆனால் எல்லா நேரத்திலும் குழந்தைகளுக்கு பழச்சாறு கொடுக்கக் கூடாது. காலையில் வெறும் வயிற்றில் பழச்சாறு கொடுப்பதை தவிர்த்துவிடவேண்டும். சாப்பிட்ட உடனேயும் ஜூஸ் கொடுக்கக்கூடாது. காலை உணவு மற்றும் மதிய உணவுக்கு இடைப்பட்ட நேரங்களில் ஜூஸ் கொடுக்கலாம். குறிப்பாக காலை 11 மணி மற்றும் பிற்பகல் 3 மணி அளவில் பழச்சாறு பருக வைக்கலாம். ஒரே மாதிரியான பழ ஜூஸை தினமும் கொடுப்பதையும் தவிர்க்க வேண்டும்.



                       சிலவகை பழங்கள் குழந்தைகளுக்கு பிடிக்காது. அவை சத்தானது என்பதற்காக கட்டாயப்படுத்தி அருந்தவைக்கக்கூடாது. அவர்களுக்கு பிடித்தமான மற்ற பழங்களுடன் அவர்களுக்கு பிடிக்காத பழங்களையும் சேர்த்து  பழச்சாறாக  தயாரித்துக் கொடுக்கலாம். இரவு நேரங்களில் பழச்சாறு  கொடுப்பதை கூடுமானவரை தவிர்க்க வேண்டும். அதிலும் குறிப்பாக எலுமிச்சை, திராட்சை, ஆரஞ்சு பழ பழச்சாறுகளை  இரவு நேரங்களில் தவிர்த்திட வேண்டும். குளிர்காலத்தில் சளித்தொல்லை, மூச்சுத்திணறல் போன்ற பாதிப்புள்ள குழந்தைகளுக்கு பழச்சாறு  கொடுக்கக்கூடாது.

                குழந்தைகளுக்கு 10 மாதத்தில் இருந்தே பழச்சாறு கொடுக்க தொடங்கலாம். நாளடைவில் பழச்சாறு  கொடுப்பதை படிப்படியாக குறைத்துவிட்டு பழங்களை சாப்பிட பழக்கப்படுத்த வேண்டும்


Saturday, November 4, 2017

குழந்தைகளுக்கு மத்தியில் ஏற்படும் சண்டையை எவ்வாறு கையாள்வது?



         அண்ணன், தம்பி, அக்கா, தங்கை என உடன் பிறப்புகளுள் பகைமை வளர முக்கிய காரணமாக இருப்பது பெற்றோர் தான்.
     திருமணமாகி, 10 வயதுக்குட்பட்ட இரண்டு குழந்தைகளை வளர்க்கும் பெற்றோர்களுக்கு தினமும் "தகுடுதத்தோம்" கதி தான். அந்த அளவு வீட்டில் தினம் தினம் ஓர் உலகப் போர் மூண்டுவிடும். தெருவே அதிரும் அளவு சண்டையிடும் இவர்கள் கூறும் அதற்கான காரணம் எப்போதுமே மிகவும் சில்லியாக தான் இருக்கும்.



         குழந்தைகளாக இருந்த போது நாமும் இதையே தான் செய்தோம் என்பதை மறந்துவிட முடியாது. உடன்பிறந்த இவர்களுக்குள் இப்படி சண்டை மற்றும் பகைமை வளர்வதற்கு ஒருசில வகைகளில் பெரியவர்கள் தான் முக்கியக் காரணமாக இருக்கிறார்கள்....

    அண்ணன், தம்பி, அக்கா, தங்கை என உடன் பிறப்புகளுள் பகைமை வளர முக்கிய காரணமாக இருப்பது பெற்றோர் தான். இருவரை மனதினுள் சமமாக காதலித்தாலும், வெளியில் சுட்டியாக இருப்பவர் அல்லது படிப்பில் கெட்டிக்காரராக திகழும் குழந்தைகளுக்கு முன்னுரிமை வழங்கி இன்றி நடந்துக் கொள்வதை தவிர்த்தாலே இந்த பகைமை குறைந்துவிடும்.
குற்றம் கூறுவது, இரண்டு மூன்று குழந்தைகள் இருக்கும் வீட்டில் அனைவரும், அனைத்திலும் சிறந்து விளங்க மாட்டார்கள். எனவே, யாராவது எதையாவது சரியாக செய்யாவிட்டால், மற்ற குழந்தைகள் முன்பு நிறுத்தி குற்றம் கூற வேண்டாம்.

      பெரும்பாலும் உடன்பிறந்த குழந்தைகளுக்கு மத்தியில் பகைமை வளர காரணமே ஒருவரை, மற்றொருவரோடு ஒப்பிட்டு பேசுவதனால் தான். எனவே, எக்காரணம் கொண்டும் ஒப்பிட்டு பேசாதீர்கள்.

    உறவினர்கள்.., பெற்றோர்கள் தங்கள் குழந்தையை எந்த பாகுபாடு இன்றி வளர்த்தாலும், இந்த உறவினர்கள் சும்மா இருக்காமல், அவன் நல்ல சுட்டியா இருக்கான், சுறுசுறுப்பா இருக்கான், இதோ இவன் தான் மந்தமா இருக்கான் என்று கூறிவிட்டு சென்றுவிடுவார்கள். ஆனால், இது அந்த பிஞ்சி மனதில் பகைமை எனும் நஞ்சை வளர்ப்பதற்கு சமம். இவ்வாறு செய்யா வேண்டாம்.

   பெரியவர்களோடு ஒப்பிடுவது, நீதான் தாத்தா மாதிரி இருக்க, நீதான் அப்பா மாதிரி இருக்க.. என்று ஒருவரை பெரியவர்களோடு ஒப்பிடுதல். பொதுவாக குழந்தைகள் பெரியவர்களை போல இருக்க வேண்டும் என்று விரும்புவர்கள். இதில், ஒருவர் அப்படி இருக்கிறார், தான் அப்படி இல்லையா என்பது அவர்கள் மீது பகைமையை வளர்க்க காரணமாகிவிடும்.


Wednesday, November 1, 2017

Smartphone ல் விளையாடும் குழந்தைகளை தாக்கும் கழுத்துவலி

Smartphone ல் விளையாடும் குழந்தைகளை தாக்கும் கழுத்துவலி

    Smartphoneகள் இப்போது குழந்தைகளின் கைகளில் சர்வ சாதாரணமாக தவழ தொடங்கி விட்டன. அவர்களின் சேட்டைகளை கட்டுப்படுத்துவதற்காக பெற்றோரே கையில் போனை கொடுத்துவிடுகிறார்கள். குழந்தைகளை போனிலேயே மூழ்க வைப்பது மன நலத்திற்கு மட்டுமின்றி உடல் நலத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்திவிடும். குழந்தைகள் நீண்ட நேரம் வீடியோ பார்த்தாலோ அல்லது விளையாடினாலோ கழுத்து பகுதியில் அழுத்தம் அதிகமாகி வலி ஏற்படும்.



             குழந்தைகள் குனிந்த தலை நிமிராமலேயே கூர்ந்து போனை பார்த்துக்கொண்டிருந்தால் கழுத்துவலி ஏற்படும். நாளடைவில் தோள்பட்டை வலி, முதுகுவலி ஏற்படவும் வழிவகுத்துவிடும். ஆதலால் குழந்தைகள் அதிக நேரம் போன் உபயோகிப்பதற்கு தடைபோட வேண்டும்

            அவர்கள் போனை பயன்படுத்தும்போதும் நேராக அமர்ந்து இருக்கிறார்களா? என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். தலை குனிந்து போனை பார்ப்பதற்கு அனுமதிக்கக்கூடாது. இப்போது குழந்தைகளின் கல்வி சம்பந்தமான ஏராளமான அப்ளிகேஷன்கள் இருக்கின்றன
      அது அவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்ற எண்ணத்தில் அதிக நேரத்தை போனிலேயே செலவழிக்க அனுமதிக்கக்கூடாது.


              அது மூளைக்கு அயர்ச்சியை ஏற்படுத்தி எதிர்விளைவுகளை உண்டாக்கிவிடும். பெற்றோர் தங்கள் கைகளில் போனை வைத்துக்கொண்டு குழந்தைகளுக்கு பாடம் சம்பந்தமான தகவல்களை சொல்லி கொடுக்கலாம். அப்போதும் செய்முறை மூலமே பாடங்களை பயிற்றுவிப்பது நல்லது.
          Smartphone மோகத்தில் இருந்து விடுவிக்க, வெளி விளையாட்டுகள் மீது அவர்களின் கவனத்தை திசை திருப்பி விட வேண்டும்.

Wednesday, October 25, 2017

குழந்தைகள் சாப்பிட அடம் பிடிக்கிறார்களா?

                         


                          குழந்தைகள் சாப்பிட அடம் பிடிக்கிறார்களா? அப்போ இதயெல்லாம் செய்யுங்கள்


                குழந்தைகளுக்கு என்று சில ரசனைகள் உள்ளது. ஆனால் அதை புரிந்துகொண்டு, தங்கள் குழந்தைகளை சாப்பிட வைக்க தாய்மார்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள்.

             குழந்தைகளை சமத்தாக சாப்பிட வைக்க இதோ சில டிப்ஸ்
குழந்தைகளுக்கு சாப்பிட கொடுக்கிற பொருள் கண்ணை கவரும் வண்ணங்களாக இருக்க வேண்டும். அதாவது சிவப்பு, பச்சை போன்ற வண்ணங்களில் கொடுத்தால் குழந்தைகள் விரும்புவர்.
பெரிய கப்பில் குழந்தைகளுக்கு பால் கொடுப்பதை விட சிறிய கப்பில் இரண்டு முறை கொடுத்தால் போதுமானது.

                   வெறும் பாலை கொடுப்பதை தவிறுங்கள். பாலில் ஏதாவது சொக்லெட் பவுடர் போன்றவற்றை பயன்படுத்தலாம்.
மசாலா அதிகம் உள்ள பொருள்களை குழந்தைகளுக்கு தறுவது சரியானதல்ல. முதல் முறை சுவைத்ததும் அவர்களுக்கு பிடிக்கவில்லை என்றால் பிறகு எப்போதுமே அதை விரும்ப மாட்டார்கள்.

                   குழந்தைகள் 2 கேரட்டுகள் மேல் சாப்பிட கேட்டால் கொடுக்காதீர்கள். அப்படி ஒரே காய்கறி அல்லது பழங்களை கொடுத்தால் மற்ற சாப்பாடு உணவில் இருக்கும் சத்துக்களை அவர்கள் மிஸ் செய்வார்கள்.

                தன்னை சுற்றி இருப்பவர்கள் செய்யும் விஷயங்களை செய்ய குழந்தைகள் ஆசைப்படுவார்கள். அதனால் குழந்தைகள் சாப்பிடும் போதும் பெற்றோர்கள் அவர்கள் பக்கத்தில் உட்கார்ந்து சாப்பிட்டால் அவர்கள் அதை விரும்புவார்கள். இதேபோல் அவர்கள் விளையாடும் போதும் அவர்களுடன் இருப்பது நல்லது.

                            உங்கள் குழந்தைகளின் விருப்பத்திற்கு ஏற்ப சாப்பிட கொடுங்கள். மற்றவர்கள் தங்கள் குழந்தைகளுக்கு தருவது போல் நாமும் கொடுப்போம் என்று உங்கள் குழந்தைகளை வாட்டாதீர்கள்.

Tuesday, October 24, 2017

அடம்பிடிக்கும் குழந்தைகளை சமாளிப்பது எப்படி?

           
             குழந்தை எதையாவது கேட்டு அடம்பிடித்தால், குழந்தையிடம் விவாதிக்காதீர்கள். தவறான விஷயம் அல்லது நடக்காத ஓர் விஷயம், ஆபத்தான ஒரு விஷயத்திற்கு அழுது அடம்பிடித்தாலும் நீ சொல்வது தவறு, நடக்காது என்று சொல்லி உங்களின் கருத்தை நிறுவ முயற்சிக்காதீர்கள்.



                பேசுவது என்பது நீங்கள் மட்டுமே பேசிக் கொண்டிருப்பது அல்ல. வீணாக அடம்பிடிக்காதே என்று அறிவுரை வழங்குவது அல்ல. அவர்கள் சொல்வதை கேட்கவும் வேண்டும்.அப்போதைக்கு அவர்களை சமாதனப்படுத்தும் விதமாக பேச வேண்டும். நீங்கள் சொல்கிற பதில் அப்போதைக்கு அவர்கள் நம்புவதற்கு போதுமானதாக இருந்தாலே போதும்.



              ஒவ்வொரு குழந்தைக்கும் அவர்களது பெற்றோர்கள் தான் முதல் ரோல்மாடலாக இருப்பார்கள். நீங்கள் செய்யும் ஒவ்வொரு செயலையும் உங்கள் குழந்தை கவனித்துக் கொண்டேயிருக்கும். அதனால் பெற்றோர் கவனமாக இருப்பது மிகவும் அவசியமானது.

                  குழந்தைகளுக்கு ஏற்ற மனநிலையை உருவாக்கிடுங்கள். அவர்களிடம் மனம் விட்டு பேசுபவராக எப்போதும் சப்போர்ட்டிங் செய்திடும் பெற்றோர்களாக இருங்கள். தேவையில்லாமல் அவர்களை கண்காணிப்பவர்களாக விமர்சிப்பவர்களாக மட்டுமே இருக்க வேண்டாம்.

                   எப்போதும் வீட்டுக்குள்ளே குழந்தைகளை அடைத்து வைக்காமல், மற்ற குழந்தைகளுடன் இணைந்து விளையாட அனுமதியுங்கள். வெற்றி தோல்விகளையும், பகிர்தலையும் குழந்தைக்கு ஊக்கப்படுத்துங்கள். பிறர் வைத்திருப்பது எல்லாம் தனக்கும் வேண்டும் என்று அடம்பிடிப்பதை தவிர்க்க பகிர்தல் என்பது மிகவும் தேவையானதாக இருக்கும்.

              உங்கள் குழந்தையின் செயல்களை பிறரிடம் சொல்லி பெருமைப்படுவதை விட அந்தக் குழந்தையிடமே நேரடியாக பாராட்டுங்கள். சின்ன சின்ன பரிசுகள் கூட கொடுக்கலாம். அடம்பிடித்து அழுவது தவறு என்பதை நாசூக்காக உணர்த்துங்கள்.

                   அடம்பிடித்தாலே குழந்தை தவறான விஷயத்திற்கு தான் அடம்பிடிக்கும் என்று நீங்களாகவே முடிவு செய்யாதீர்கள். அவர்களின் விருப்பு வெறுப்புகளுக்கு மதிப்பு கொடுங்கள். குழந்தையின் விருப்பத்திற்கு மரியாதை கொடுங்கள்.

         அடம்பிடித்து அழும் குழந்தையை அப்டித்தான் எல்லாத்துக்கும் அடம்பிடிச்சு அழுவா என்று கண்டுகொள்ளாமல் விடுவதை முற்றிலுமாக தவிர்த்திடுங்கள். இது குழந்தையின் மனநிலையையே பாதித்துவிடும். உங்கள் மீது இருக்கும் நம்பிக்கையை முற்றிலுமாக குழைத்துவிடும்.

மலேரியா என்றால் என்ன?

மலேரியா என்றால் என்ன?


                        மலேரியா என்பது ஒட்டுண்ணிகளால் ஏற்படும் ஒரு தொற்றுநோய். இது நுளம்பினால் ஒருவரிலிருந்து ஒருவருக்குக் கடத்தப்படுகிறது. தொற்று நோயானது, குளிர் நடுக்கம், காய்ச்சல், மற்றும் ஃப்ளூ காய்ச்சல் போன்ற வேறு அறிகுறிகளை ஏற்படுத்தும். இதற்குச் சிகிச்சை செய்யப்படாவிட்டால் மரணத்தில் விளைவடையலாம். பெரும்பாலும் பிள்ளைகள்தான் மலேரியா நோய்க்காளாகும் ஆபத்திலிருக்கிறார்கள்.

            உலகின் பின்வரும் சில பாகங்களில் மலேரியா நோய் பொதுவானதாகக் காணப்படுகிறது:
  1. ஆபிரிக்கா
  2. ஆசியா
  3. மத்திய கிழக்கு
  4. தென் அமெரிக்கா
  5. மத்திய அமெரிக்கா


                        இந்தப் பகுதிகளுக்கு விஜயம் செய்யும்போது பிள்ளைகளை தொற்றுநோய் பாதிக்கலாம். பிரயாணம் செய்யும்போது முன்கூட்டியே தயாராவது முக்கியம். தகுந்த மருந்துகளை எடுத்துச் செல்லவும்

Monday, October 23, 2017

பெற்றோர்களே குழந்தைகளோடு விளையாடுங்கள்

பெற்றோர்களே குழந்தைகளோடு விளையாடுங்கள்



                               பெற்றோராக குழந்தைகளோடு விளையாடுவது நீங்கள் செய்யவேண்டிய முக்கியமான பணிகளில் ஒன்று
குழந்தைகளுடன் செலவிடும் நேரத்தை வீண் என்று ஒரு போதும் நினைக்க வேண்டாம் என்கிறார்கள், மனநல மருத்துவர்கள். விளையாட்டு ஒரு மகிழ்வான விஷயம் என்பதோடு ஈடுபாட்டையும் ஊக்குவிக்கக் கூடியது. பலன்களை அடைவதில் சிந்தித்தலை விட செயல்படுதல் மிகவும் முக்கியமான ஒன்று. பெற்றோராக குழந்தைகளோடு விளையாடுவது நீங்கள் செய்யவேண்டிய முக்கியமான பணிகளில் ஒன்று.

விளையாட்டு, குழந்தைகளுக்கு மட்டுமின்றி, பெரியவர்களுக்கும் வாழ்வின் ஒரு முக்கிய அங்கமாகும். குழந்தைகளிடம் அதிக நேரம் செலவிடுவோர் அதன் மூலம் வாழ்வில் நல்ல மாற்றங்கள் நிறைய ஏற்படுவதாக நம்புகின்றனர். இது உங்களை இளைப்பாறச் செய்யும், ஊக்கம் கொள்ளச் செய்யும். குழந்தைகளுடன் விளையாடுவது மகிழ்ச்சியைத் தருவதால் மனம் புத்துணர்ச்சி பெற்று சோர்விலிருந்து விடுபடுவோம்.

                                           இந்த விளையாட்டுகள் பெரியவர்களுக்கும் குழந்தைகளுக்கும் உடல் திறனையும், அறிவு மற்றும் உணர்வு திறனையும் மேம்படுத்துகின்றன. குழந்தைகளுடன் நேரம் செலவிடும் போது, அவர்களுடைய மகிழ்ச்சியான பொழுதுகளில், அவர்கள் கற்றுக் கொள்ளவேண்டியவற்றை திணிக்க முயலாதீர்கள். குழந்தைகளின் செய்கைகளை அவர்களே கட்டுப்படுத்திக் கொள்ளவும், முடிவெடுக்கவும், அனுமதியுங்கள்.
குழந்தைகளுடன் செலவிடும் நேரத்தில் நீங்கள் பொறுமையையும், புரிதலையும், கற்றுக்கொள்வதற்கு இது ஒரு முக்கிய பங்காற்றுகிறது. குழந்தைகளுடன் விளையாடும்போது ஏற்படும் பந்தம் நெடுநாள் வரை நீடித்திருக்கும். இது தங்களுக்கு ஏற்படும் பிரச்சினைகள் மற்றும் கவலைகளை பகிர்ந்து கொள்வதற்கான வாய்ப்பை குழந்தைகளுக்கு ஏற்படுத்திக் கொடுக்கும். கடும் மன நெருக்கடியில் உள்ள பெரியவர்களுக்கு, குழந்தைகளுடன் செலவிடும் நேரத்தின் போது மன அழுத்தம் பெருமளவு குறைகிறது.

                       குழந்தைகள்-பெரியவர்கள் இடையே காணப்படும் சமூக, உணர்வு சார்ந்த நடத்தைகள், அவர்களிடையே காணப்படும் பந்தம் ஆகியவற்றில் ஆக்சிடோசின் என்ற ஹார்மோன் முக்கிய பங்கு வகிக்கிறது, அது மனதிற்கு ஆறுதலையும் அமைதியையும் தருவதாகக் கருதப்படுகிறது. குழந்தைகளுடனான விளையாட்டு மனத்திற்குத் தெம்பைத் தருவதோடு மட்டுமல்லாமல் மேலும் சுறுசுறுப்படையச் செய்கிறது.

                                          ஒரே இடத்தில் அசையாமல் இருந்து கொண்டோ அல்லது டி.வி.யை பார்த்துக் கொண்டோ இருப்பவர்களுக்கு அந்தப் பழக்கத்திலிருந்து வெளியே வரவும் இது உதவுகிறது. உங்கள் கற்பனைத் திறனை தூண்டி புதிய சிந்தனைகளை வாழ்வில் புகுத்துகிறது. இது மன ஆரோக்கியத்தை மேம்பட வைக்கிறது. நாம் வளர வளர மெல்ல விளையாடுவதைக் குறைத்து விடுவோம் எனினும் விளையாட்டு உங்களை இளமையாகவும் மூளையை சுறுசுறுப்பாகவும் வைக்க உதவும்.

குழந்தையின் வளர்ச்சிக்கு அத்தியாவசியமான 5 உணவுகள்

குழந்தையின் வளர்ச்சிக்கு அத்தியாவசியமான 5 உணவுகள்





            குழந்தைகளின் உயரத்தை அதிகரிக்க சரியான உணவுகள் அவசியம். குழந்தைகள் நல்ல, போதுமான அவர்களுக்கு 5 உணவு பொருட்களின் தேவை அத்தியாவசியமாகிறது.

        குழந்தையின் வளர்ச்சிக்கு அத்தியாவசியமான 5 உணவுகள்
குழந்தைகள் பிறந்த சமயம் உள்ள உயரம் முழுவதும் ஜீன் என்ற மரபு கடத்துப்பொருள் மூலமாக பெற்றதே! பிறந்தபின் முதல் 6 மாதங்கள் தாய்ப்பால் மூலம் உடலுக்குத் தேவையான எடை, ஆரோக்கியம் மற்றும் அடிப்படை சத்துக்களை பெறுகின்றனர்; ஓரளவு உயரத்தையும் பெறுவர். குழந்தைகள் நல்ல, போதுமான அவர்களுக்கு 5 உணவு பொருட்களின் தேவை

அத்தியாவசியமாகிறது. அந்த 5 உணவுகள் என்னென்ன என்று இந்த பதிப்பில் பார்க்கலாம்.

1. பால் என்றாலே நமக்கு கால்சியத்தின் நினைவு தான் வரும். பாலில் உள்ள கால்சியம் எலும்பை பலப்படுத்துவதோடு குழந்தைகளின் உயரத்தையும் அதிகரிக்க உதவுகிறது. பால் பிடிக்காத குழந்தைகளுக்கு, பாலுடன் பழங்களை கலந்து தர விரும்பி பருகுவர். பாலில் வைட்டமின் எ மற்றும் புரத சத்துக்களும் நிறைந்துள்ளன.

2. உலர் திராட்சை மற்றும் பருப்புகள் அமினோ அமிலம் மற்றும் ஆரோக்கியமான கொழுப்பு சத்துக்களை கொண்டுள்ளன; இவை உடல் திசுக்களை புதுப்பிக்க உதவுகின்றன. மேலும் உலர் திராட்சைகள் குழந்தைகளின் வளர்ச்சி ஹார்மோனை தூண்டுவதாக விளங்குகின்றன.

3. வாழைப்பழத்தில் உள்ள பொட்டாசியம் சத்துக்கள் எலும்பு திசுக்களை வளரச் செய்து, உடல் வளர்ச்சியை அதிகரிக்கின்றன; மேலும் உடலின் இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகின்றன.

4. சோயா பீன்கள் அதிகப்படியான புரதச் சத்து கொண்டவை. சோயா பால் குழந்தைகளுக்கு ஏற்றது. இது எலும்பு மற்றும் திசுக்களின் பலத்தை அதிகரிக்க உதவுகின்றது. இரண்டு வயதிற்கு குறைவான குழந்தைகளின் மூளை வளர்ச்சியில் இது முக்கிய பங்கு வகிக்கிறது. இதில், வைட்டமின் எ மற்றும் டி, கால்சியம் சத்துக்களும் உள்ளன.

5. முட்டைகள் குழந்தைகளின் வளர்ச்சிக்கும், உடல் ஆரோக்கியத்திற்கும் ஏற்றவை. இதில் வைட்டமின் டி, கால்சியம், வைட்டமின் பி2/ரிபோபிளவின் போன்ற சத்துக்கள் உள்ளன. இவை குழந்தைகளுக்கு பலம் அளித்து, உயரத்தை அதிகரிக்க உதவுகின்றன.

குழந்தைகளின் உயரத்தை அதிகரிக்க சரியான உணவுகள் அவசியம். ‘ஒரே நாளில் ஒபாமா ஆக முடியாது என்பது’ எவ்வளவு உண்மையோ அதே போல், ‘ஒரு நாள் இரவில் குழந்தையின் உயரம் அதிகரிக்காது’. உயரத்தை அதிகரிக்கும் உணவுகளையும், நீச்சல், டென்னிஸ், கூடைப்பந்து போன்ற விளையாட்டுகளை தினசரி விளையாடி, உடற்பயிற்சிகள் செய்வதன் மூலம், குழந்தையின் உயரத்தில் முன்னேற்றத்தைக் காணலாம்..!

Saturday, October 21, 2017

குழந்தைகளின் ஞாபக சக்தியை அதிகரிக்க வழிகள்



                  கீழே கொடுக்கப்பட்டுள்ள பழக்கத்தை குழந்தைகளுக்கு வரவழைத்தால், அவர்களின் ஞாபக சக்தி அதிகரிப்பதோடு, அவர்கள் சுறுசுறுப்போடும் இருப்பார்கள்.



* பெற்றோர்கள் குழந்தைகளிடம் எதையும் முழு கவனத்தோடு தாய் மொழியிலேயே சிந்திக்க வேண்டும், அதுவே எளிதில் புரிந்து மனதில் பதியும், ஒரு வரி புரிய ஒரு நாள் ஆனாலும் பரவாயில்லை, ஆனால் எதையும் புரியாமல் படிக்கக் கூடாது என்று சொல்லி பழக்க வேண்டும்.

* எப்போதும் குழந்தைகளுக்கு படித்தவுடன் எழுதி பார்க்கும் பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும். அதிலும் படங்களுடன் கூடிய தகவல்கள் மனதில் பதியும். எனவே படிப்பில் சற்று மந்தமாக இருக்கும் உங்கள் குழந்தைகளுக்கு இந்த முறையை அவசியம் பின்பற்றினால் மிகவும் நல்லது.

* உங்கள் குழந்தைகளை குறைந்தது 8 மணிநேரமாவது தூங்க வைக்க வேண்டும். மேலும் இரவில் சீக்கிரம் தூங்கி அதிகாலையில் எழுந்து படிக்கும் பழக்கத்தைப் பின்பற்ற வைக்க வேண்டும்.

* குழந்தைகளுக்கு மாவுச்சத்து உள்ள உணவுகளை விட, புரதச்சத்து நிறைந்த எளிதில் செரிமானமாகும் உணவை கொடுப்பது நல்லது. ஏனெனில் மாவுச்சத்துள்ள உணவுகள் மந்த நிலையை ஏற்படுத்தும்.

ஆகவே இத்தகைய பழக்கத்தை குழந்தைகளுக்கு வரவழைத்தால், அவர்களின் ஞாபக சக்தி அதிகரிப்பதோடு, அவர்கள் சுறுசுறுப்போடும் இருப்பார்கள்.

மனித உடலின் வியத்தகு விஷயங்கள்

                       
                            ஒவ்வொரு மனிதனும் வாழ்நாளில் நடக்கும் கணக்கை பார்த்தால், அவன் பூமியை இரண்டு முறை சுற்றி வருவதற்கு சமம்.
மனித உடலில் காணப்படும் தசைகளின் எண்ணிக்கை 639. மனித மூளையில் மொத்தம் 1200 கோடி நரம்பு செல்கள் உள்ளன. மனிதன் இறந்த மூன்று நிமிடம் கழித்து, மூளையின் ரத்த ஓட்டம் நின்று விடுகிறது. மூளையில் உள்ள நியுரான்களின் எண்ணிக்கை 1400. மனிதனின் முதுகுத்தண்டின் எலும்புகள் 33. மனித மூளையின் எடை 1.4 கிலோ.

                                              உடலின் சாதாரண வெப்ப நிலை 98.4 டிகிரி. மனித உடலில் உள்ள ரத்தத்தின் சராசரி அளவு 5 லிட்டர். உடலின் மெல்லிய சருமம் கண் இமை. மனித உடலில் உள்ள குரோமோசோம்களின் எண்ணிக்கை 23 ஜோடி. ஒரு மனித உடலில் கிடைக்கும் கொழுப்பில் இருந்து 10 சோப்புக்கட்டிகள் தயாரிக்கலாம்.

                       மனிதனின் கண் நிமிடத்திற்கு 25 முறை மூடித்திறக்கிறது. நாம் ஒருவார்த்தை பேசும் போது நம் முகத்தில் 72 தசைகள் அசைகின்றன. மனித நாக்கின் நீளம் 10 செ.மீ., ஒருமனிதன் தன் வாழ்நாளில் சராசரியாக குடிக்கும் தண்ணீரின் அளவு 60,000 லிட்டர். மனித உடலில் கெட்டியான பகுதி பற்களிலுள்ள எனாமல். நமது கால் பாதங்களில் 2,50,000 வியர்வை சுரப்பிகள் உள்ளன. நாம் வாழ்நாளில் சராசரியாக சாப்பிடும் உணவின் மொத்த அளவு 30,000 கிலோ. நம் உடல் எடையில் 9 சதவீதம் ரத்தத்தினால் ஆனது. இந்த ரத்தத்தில் 91 சதவீதம் நீர்தான். நம் உடல் முழுவதும் ரத்தம் ஒரு முறை சுற்ற 64 வினாடிகள் ஆகின்றன.

                     நம் தசைகள் உண்டாக்கும் வெப்பம் ஒரு லிட்டர் நீரை ஒரு மணி நேரம் கொதிக்க வைக்க போதுமானது. நாம் வெளியேற்றும் சிறுநீரில் நீரின் அளவு 96 சதவீதமும், யூரியா 2 சதவீதமும், கழிவுப்பொருட்கள் 2 சதவீதமும் உள்ளன.

           
                                                   நாம் பிறக்கும்போது சுமார் 300 எலும்புகளுடன் பிறக்கிறோம். முழுவளர்ச்சியடைந்த பின் 206 எலும்புகளே இருக்கும். நாளடைவில் ஒன்றோடொன்று இணைவதால் சுமார் 94 எலும்புகள் குறைகின்றன. நமக்கு நாள்தோறும் 16 கிலோ காற்று சுவாசிக்கத் தேவைப்படுகிறது.

                          உடலின் மிகப் பெரிய பகுதியாக விளங்குவது தோல் பகுதியாகும். வளர்ந்த ஒரு மனித உடலில் சுமார் 2 சதுர மீட்டர் பரப்புள்ள தோல் பகுதி, உடலை நீரிலிருந்தும் வெப்பத்திலிருந்தும் பாதுகாக்கும் போர்வையாக விளங்குகிறது. நமது உடலில் உள்ள ஈரல் 500 வகையான வேலைகளை செய்கிறது. மிகவும் சிக்கல் நிறைந்த, பெருமளவு செயல்களைச் செய்யும் உறுப்பாக மனித உடலில் விளங்குவது ஈரல் ஆகும்.

                       மனித உடலில் உள்ள மிகப் பெரிய சுரப்பி கல்லீரல்தான். மனித நுரையீரலில் உள்ள நுண் காற்றுப் பைகளின் எண்ணிக்கை 300 மில்லியன். ஒவ்வொரு நுண் காற்றுப்பையும் 0.2 மில்லி மீட்டர் விட்ட அளவு கொண்டது. மனித உடலில் சதை அழுத்தம் அதிகம் உள்ள பகுதி நாக்கு. ஒவ்வொரு மனிதனும் வாழ்நாளில் நடக்கும் கணக்கை பார்த்தால், அவன் பூமியை இரண்டு முறை சுற்றி வருவதற்கு சமம். நாம் தும்மும் போது நமது மூக்கின் வழியாக செல்லும் காற்றின் வேகம் சுமார் 150 கிலோ மீட்டர். அதுபோல தும்மும் போது, கண்டிப்பாக கண்களை மூடிவிடுவோம்.

Tuesday, October 10, 2017

ICT (தகவல் மற்றும் தொடர்பு தொழில்நுட்பம் அல்லது தொழில்நுட்பங்கள்)

ICT
(தகவல் மற்றும் தொடர்பு தொழில்நுட்பம் அல்லது தொழில்நுட்பங்கள்)


ICT அல்லது தகவல் மற்றும் தொடர்பு தொழில்நுட்பம் (அல்லது தொழில்நுட்பங்கள்), 
நவீன கணினிக்கு தேவையான உள்கட்டமைப்பு மற்றும் கூறுகள் ஆகும்.

ICTக்கு ஒற்றை, உலகளாவிய வரையறை இல்லாத போதிலும், இந்த வார்த்தை பொதுவாக அனைத்து சாதனங்கள்NETWORKING  கூறுகள், பயன்பாடுகள் மற்றும் அமைப்புகள் ஆகியவற்றிற்கு அர்த்தம், அதாவது மக்கள் மற்றும் நிறுவனங்கள் (அதாவது, வணிகங்கள், இலாப நோக்கமற்ற முகவர், அரசாங்கங்கள் மற்றும் குற்றவியல் நிறுவனங்கள்)  digital   உலகம்

ICT அமைப்பின் கூறுகள்
               ICT ஆனது இணைய-இயங்கும் கோளத்தையும், வயர்லெஸ் நெட்வொர்க்குகளால் இயங்கும் மொபைல் ஒன்றையும் ஒருங்கிணைக்கிறது. இது லேண்ட்லைன் தொலைபேசி, வானொலி மற்றும் தொலைக்காட்சி ஒளிபரப்பு போன்ற பழமையான தொழில்நுட்பங்களை உள்ளடக்கியது - அனைத்தும் இன்றும் பரவலாக செயற்கை நுண்ணறிவு  artificial intelligence மற்றும் ரோபாட்டிக்ஸ்   Robotics போன்ற வெட்டு-விளிம்பில் ICT துண்டுகளோடு பரவலாக பயன்படுத்தப்படுகின்றன.

                    ICT சில நேரங்களில் IT (தகவல் தொழில்நுட்பத்திற்காக) என்ற பெயரில் பயன்படுத்தப்படுகிறது; இருப்பினும், ICT என்பது கணினி மற்றும் டிஜிட்டல் டெக்னாலஜீஸ் தொடர்பான எல்லா கூறுகளின் பரந்த, விரிவான பட்டியலை  IT க்கு காட்ட பொதுவாகப் பயன்படுத்தப்படுகிறது.

             ICT கூறுகளின் பட்டியல் முழுமையானது, அது வளர தொடர்கிறது. கணினிகள் மற்றும் தொலைபேசி போன்ற சில கூறுகள் பல தசாப்தங்களாக இருந்தன. ஸ்மார்ட்போன்கள், டிஜிட்டல் டி.வி.க்கள் மற்றும் ரோபோக்கள் போன்ற பிற சமீபத்திய பதிவுகள்.


                           ICT ஆனது அதன் கூறுபாடுகளின் பட்டியலைக் காட்டிலும் பொதுவாகவே பொருள்படும். இது பல்வேறு பல்வேறு கூறுகளின் பயன்பாட்டை உள்ளடக்கியது. உண்மையான திறன், சக்தி மற்றும் ICT இன் ஆபத்தை காணலாம்.

பேஜர் ( Pager ) என்றால் என்ன?

பேஜர் ( Pager ) என்றால் என்ன?

What is a Pager?


ஒரு பேஜர் ( Pager )என்பது ஒரு எளிய வானொலி மட்டுமே, ஒரே நேரத்தில் ஒரு நிலையினைக் கேட்கிறது. ரேடியோ டிரான்ஸ்மிட்டர் ஒரு குறிப்பிட்ட அதிர்வெண் மீது சிக்னல்களை ஒளிபரப்பிக் கொண்டிருக்கிறது. அந்த குறிப்பிட்ட நெட்வொர்க்குக்கான அனைத்து பேஜர்களும் ( Pager ) டிரான்ஸ்மிட்டரில் இருந்து அதே அதிர்வெண் ஒலிபரப்பிற்கு மாற்றப்பட்ட ஒரு உள்ளமைக்கப்பட்ட பெறுநரைக் கொண்டுள்ளன. பேஜர்கள் ( Pager) திரும்பி வந்தவுடன் டிரான்ஸ்மிட்டரில் இருந்து சீக்கிரம் கேட்கும் பேஜர்கள்   ( Pager ) கேட்கிறார்கள்.



ஒவ்வொரு பேஜருக்கும் சேனல் அணுகல் புரோட்டோகால் (CAP-Channel Access Protocol (CAP) code.) குறியீடு என்று அழைக்கப்படும் ஒரு குறிப்பிட்ட அடையாள வரிசைமுறை உள்ளது. பேஜர் அதன் தனிப்பட்ட CAP -Channel Access Protocol (CAP) code.குறியீட்டைக் கவனிக்கிறது. குறியீட்டைக் கேட்கும்போது, பயனர் அதை எச்சரிக்கிறார் மற்றும் பேஜர்   ( Pager ) வகையைப் பொறுத்து கூடுதல் தகவல் வழங்கலாம்.

வயர்லெஸ் என்றால் என்ன? (WHAT IS A WIRELESS )

வயர்லெஸ் என்றால் என்ன?  (WHAT IS A WIRELESS )

வயர்லெஸ் என்பது தொலைதூரத்தை விவரிக்கும் ஒரு சொல்லாகும், இதில் மின்காந்த அலைகள் (சில கம்பி வடக்கை விட) பகுதி அல்லது எல்லாவற்றுக்கும் தொடர்பாடல் பாதையில் சிக்னலைச் செலுத்துகின்றன. அத்தகைய ஊடுருவல் அலாரங்கள் போன்ற சில கண்காணிப்பு சாதனங்கள், மனித குரல் வரம்பிற்கு மேலாக அதிர்வெண்களில் ஒலி அலைகளை பயன்படுத்துகின்றன; இவை சில நேரங்களில் வயர்லெஸ் என வகைப்படுத்தப்படுகின்றன.

முதல் வயர்லெஸ் டிரான்ஸ்மிட்டர்கள் 20 ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் கதிரியக்கவியல் (மோர்ஸ் குறியீடு) பயன்படுத்தி காற்று மீது சென்றது. பின்னர், மினுமினுக்கும் ஒலி மற்றும் இசை ஆகியவற்றை வயர்லெஸ் வழியாக அனுப்ப முடிந்தது, இந்த ஊடகம் "வானொலி" என அழைக்கப்பட்டது. தொலைகாட்சி, தொலைநகல், தரவு தொடர்பு மற்றும் ஸ்பெக்ட்ரத்தின் ஒரு பெரிய பகுதியை பயனுள்ள பயன்பாடு ஆகியவற்றின் மூலம், "வயர்லெஸ்" என்ற வார்த்தை உயிர்த்தெழுப்பப்பட்டு வருகிறது.

இன்றைய பயன்பாட்டில் வயர்லெஸ் உபகரணங்களின் பொதுவான உதாரணங்கள் பின்வருமாறு:



Pager  


Mobile Phone

செல்லுலார் தொலைபேசிகள்  (Mobile Phone) மற்றும்  பேஜர்கள்  (Pager )-                            தனிப்பட்ட மற்றும் வணிகத்திற்கான கையடக்க மற்றும் மொபைல் பயன்பாடுகளுக்கு இணைப்பு வழங்குகின்றன

குளோபல் பொசிஷனிங் சிஸ்டம் (GPS) -Global Positioning System (GPS)


                                      கார்கள் மற்றும் லாரிகள், படகுகள் மற்றும் கப்பல்களின் கேப்டன்கள் மற்றும் விமானிகளின் விமானிகள் ஆகியோரை பூமியில் எங்கு வேண்டுமானாலும் தக்கவைத்துக் கொள்ள அனுமதிக்கிறது.



கம்பியில்லா கணினி சாதனங்கள் -  Cordless computer peripherals 
         


        கம்பியில்லா சுட்டி ஒரு பொதுவான உதாரணம்; விசைப்பலகைகள் மற்றும் பிரிண்டர்கள் கம்பியில்லா வழியாக ஒரு கணினியுடன் இணைக்கப்படலாம்

கம்பியில்லா தொலைபேசி பெட்டிகள்Cordless telephone sets


         இவை மட்டுப்படுத்தப்பட்ட வீச்சு சாதனங்கள், செல் போன்களால் குழப்பப்படக்கூடாது

வீட்டு பொழுதுபோக்கு-கணினி கட்டுப்பாட்டு பெட்டிகள்
                       Home-entertainment-system control boxes


              
                VCR கட்டுப்பாடு மற்றும் தொலைக்காட்சி சேனல் கட்டுப்பாடு மிகவும் பொதுவான உதாரணங்கள் ஆகும்; சில Hi-Fi ஒலி அமைப்புகள் மற்றும் எஃப்எம் ஒளிபரப்பு பெறுபவர்கள் இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்துகின்றனர்

தொலைதூர கேரேஜ்-கதவு திறப்பாளர்கள் -  Remote garage-door openers 
          வாடிக்கையாளர்களால் பொதுவான பயன்பாட்டில் பழமையான வயர்லெஸ் சாதனங்களில் ஒன்று; பொதுவாக ரேடியோ அதிர்வெண்களில் செயல்படுகிறது

இரு வழி ரேடியோக்கள் -  Two-way radios

       இதில் அமெச்சூர் மற்றும் குடிமக்கள் வானொலி சேவை, வணிக, கடல், இராணுவ தகவல்

பேபி திரைகள் -  Baby monitors

       இந்த சாதனங்கள் மட்டுப்படுத்தப்பட்ட ரேடியோ டிரான்ஸ்மிட்டர் / ரிசீவர் அலகுகள் எளிமைப்படுத்தப்படுகின்றன

செயற்கைக்கோள் தொலைக்காட்சி -  Satellite television
       நூற்றுக்கணக்கான சேனல்களிலிருந்து தேர்ந்தெடுக்க எந்த இடத்திலும் பார்வையாளர்களை அனுமதிக்கிறது

கம்பியில்லா லேன்கள் அல்லது உள்ளூர் பகுதி நெட்வொர்க்குகள்
        Wireless LANs or local area networks

      வியாபார கணினி பயனர்களுக்கு நெகிழ்வு மற்றும் நம்பகத்தன்மையை வழங்குகின்றன